மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித் : ‛பிரேக்கிங் நியூஸ்' தந்த நரேன் கார்த்திகேயன் | இனி தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி: இளையராஜா தகவல் | லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி | ''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்' | ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! | மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் | சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? | டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தாங்க : அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் |
‛96' புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‛மெய்யழகன்' படம் வரும் செப்., 27ல் ரிலீஸாகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. இதற்காக ஐதராபாத்தில் இப்பட புரொமோஷனில் ஈடுபட்டார் கார்த்தி. அங்கு ஒரு நிகழ்வில், தொகுப்பாளர் கார்த்தியிடம், ‛உங்களுக்கு லட்டு வேணுமா' எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி 'லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம், அதை தவிர்த்து விடுவோம்' என சிரித்தபடி பதில் அளித்தார்.
இதற்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பதியில் விரதம் இருந்து வரும் பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு சென்சிட்டிவ்வான விஷயமா. ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகராக கார்த்தியை மதிக்கிறேன். ஆனால் சனாதனம் என்று வரும்போது யோசித்து பேசுங்கள்” என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் கார்த்தி மன்னிப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‛‛பவன் கல்யாண், உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நானும் கடவுள் வெங்கடேஸ்வரரின் பக்தனே. நமது பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன், வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.