மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

‛96' புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‛மெய்யழகன்' படம் வரும் செப்., 27ல் ரிலீஸாகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. இதற்காக ஐதராபாத்தில் இப்பட புரொமோஷனில் ஈடுபட்டார் கார்த்தி. அங்கு ஒரு நிகழ்வில், தொகுப்பாளர் கார்த்தியிடம், ‛உங்களுக்கு லட்டு வேணுமா' எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி 'லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம், அதை தவிர்த்து விடுவோம்' என சிரித்தபடி பதில் அளித்தார்.
இதற்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பதியில் விரதம் இருந்து வரும் பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு சென்சிட்டிவ்வான விஷயமா. ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகராக கார்த்தியை மதிக்கிறேன். ஆனால் சனாதனம் என்று வரும்போது யோசித்து பேசுங்கள்” என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் கார்த்தி மன்னிப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‛‛பவன் கல்யாண், உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நானும் கடவுள் வெங்கடேஸ்வரரின் பக்தனே. நமது பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன், வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.