Advertisement

சிறப்புச்செய்திகள்

லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி | ''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்' | ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! | மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் | சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? | டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தாங்க : அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் | பி.சுசீலா, மு.மேத்தாவிற்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது | பாலியல் வழக்கில் நடிகர் முகேஷ் கைது, 3 மணிநேரம் விசாரணை : சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்'

24 செப், 2024 - 04:44 IST
எழுத்தின் அளவு:
Suchitra-Exclusive-Interview


சினிமாவில் பின்னணி பாடகியாக ஏராளமான ஹிட் பாடல்களை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடி பிரபலமானவர் சுசித்ரா. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமாக விளங்கினார். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், சமீபகாலமாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

நமது தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகள் வடிந்து இப்போது தான் நன்றாக இருக்கிறேன். எனக்கு பத்திரிகை துறையில் பணிபுரிய ஆசை என்பதால், தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளேன். தமிழ் எனக்கு எழுத, படிக்க தெரியாது; பேச மட்டுமே தெரியும். என் வாழ்க்கை மேம்பட்டு ரொம்ப நல்ல இடத்தில் இருக்கிறது. இடையில் கஷ்டம் வந்தபோது, நான் கையாண்ட விதம் கடவுளுக்கு பிடித்திருக்கலாம்; அதனால் இப்போது நன்றாக இருக்கிறேன்.

சுச்சி லீக்ஸ்

'சுச்சி லீக்ஸ்' தான் பிரச்னையின் ஆரம்பம். அதுதான் என் வாழ்க்கையை கெடுத்தது. பாட முடியாமலும் போனது. ஆனால் அதன்பிறகு எனக்கு பாட வாய்ப்பளிக்குமாறு யாரிடமும் கேட்கவில்லை. 'சுச்சி லீக்ஸ்' விஷயத்தை நான் தான் செய்தேன் என்றே இன்றுவரை அனைவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுமாதிரியான போட்டோக்களை சேகரித்து வைத்திருப்பவள் நான் அல்ல. சுச்சி லீக்ஸ் என புகைப்படங்கள் வெளியான அடுத்த 4 மணிநேரத்தில் என்னுடைய மொபைல் உள்ளிட்ட சாதனங்களை போலீசார் கைப்பற்றி 10 நாட்களுக்கு பிறகே கொடுத்தனர். ஆனாலும், என் டுவிட்டர் ஐடி.,யில் இருந்து தொடர்ந்து 2 நாட்களாக புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன. இதனால் போலீஸ் உயரதிகாரிகளிடம் என் டுவிட்டர் அக்கவுன்டை க்ளோஸ் செய்யுங்கள் என்றேன். நான் மனஅழுத்தமாக இருந்ததே இல்லை; அது முற்றிலும் வதந்தி. கார்த்திக் குமார் என்னை பைத்தியம் போல உருவகப்படுத்திவிட்டார்.

பாலியல் பிரச்னைகள்

கேரள திரையுலகில் நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஹேமா கமிட்டி அறிக்கை, முழுமையில்லாமல் இருப்பதாக நினைக்கிறேன். சினிமா துறையில் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வே இல்லை. இந்த துறை இப்படிதான் இருக்கும். ஆனால் இனிமேல் நடிக்க வருபவர்கள் இப்படியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என தயாராக வருவார்கள்.

2வது திருமணம்

எனக்கு 2வது திருமணம் ஆகவில்லை. அந்த காலகட்டத்தில் நான் பொய் சொல்ல வேண்டியதாக இருந்தது. அவரை திருமணம் செய்வதாக இருந்தது. அதனால் அவருடைய சம்மதத்துடன் பொதுவெளியில் கணவர் என்று சொன்னேன். அப்போது அவருடைய குணம் தெரியவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் உடல்ரீதியாக துன்புறுத்துவது தெரியவந்தது. இதனால் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர் சென்னையில் உள்ளார், நான் மும்பையில் இருக்கிறேன். இருவருக்கும் இப்போது எந்தவித தொடர்பும் இல்லை. மீண்டும் சினிமா துறையில் பார்க்க முடியாது. பழைய சுசித்ராவை யாராலையும் கொண்டுவர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் ... லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in