ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! | மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் | சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? | டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தாங்க : அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் | பி.சுசீலா, மு.மேத்தாவிற்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது | பாலியல் வழக்கில் நடிகர் முகேஷ் கைது; 3 மணிநேரம் விசாரணை | பிளாஷ்பேக்: எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நடித்த பத்மினி | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்தவர் சினிமாவுக்காக அர்ஜூனனாக மாறினார் |
சிந்து சமவெளி, மைனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ. எல் . விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'இலை' என்று பெயர் வைத்தார்.
மேலும் கணவர் தேசாய் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தனது மகன் இலையுடன் எடுத்துக்கொண்ட ஒரு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு ஒன்றாக வளர்கிறோம் என்ற ஒரு கேப்சனும் அவர் கொடுத்துள்ளார்.