பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

யோகி பாபு நடித்துள்ள 300வது படம் அர்ஜுனன் பேர் பத்து. ராஜ்மோகன் இயக்கி உள்ள இந்த படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அந்த டீசரில், யோகி பாபு ஓட்டி வரும் ஒரு வண்டி திருடு போகிறது. அதையடுத்து அவர் போலீசில் புகார் அளிக்க அந்த வண்டியை தேடி வரும்போது, இவரை போலவே பலரும் அதே வண்டி திருடு போய்விட்டதாக போலீசில் புகார் அளிக்கிறார்கள். இதன் மூலம் இந்த வண்டியை யாரோ ஒருவர் மோசடி செய்து பல பேரிடத்தில் விற்பனை செய்திருப்பது தெரியவருகிறது. அந்த நபர் யார் என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது காவல்துறை.
அதேபோல் யோகி பாபு எனது வண்டி எனக்கு கிடைத்தால்தான் நான் வீட்டுக்கே செல்வேன் என்று சொல்லி தனது வண்டியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதையடுத்து அந்த வண்டியை பல பேர் இடத்தில் விற்பனை செய்த மோசடி பேர்வழியை காவல்துறை கண்டுபிடித்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் மீதி கதை. இந்த அர்ஜுனன் பேர் பத்து படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.




