காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

'அம்மணி, மாவீரன், தண்டட்டி, அயலான்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக 'மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். சுயமரியாதை, நிலைத்தன்மை, வாழ்க்கை போராட்டத்தில் வேலைக்கு போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கை பயணத்தை அவளது சிறிய மகளின் பார்வையில் இருந்து கூறும் கதையாக உருவாகியுள்ளது.
இப்படம் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டை பெற்றது. மேலும், ஆசிய திரைப்படங்களையும் படைப்பாளர்களையும் கவுரவிக்கும் நெட்பாக் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் டீசர், மகளிர் தினமான இன்று (மார்ச் 8) வெளியிடப்பட்டது.
இது பற்றி செம்மலர் அன்னம் கூறியதாவது: நம்மைச் சுற்றியுள்ள பெண்களின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்ததில் இருந்து அவர்களின் உணர்வுகளால் உருவானது 'மயிலா'. பல பெண்கள் பெரும் பொறுப்புகளை சுமந்தாலும் அதற்கான அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கிறது. அவர்களின் பொறுமையும், மரியாதையும், உறுதியும் இந்தக் கதைக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது. மகளிர் தினத்தில் டீசரை வெளியிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக உணர்கிறேன், ஏனெனில் இந்தப்படம் அதற்கான முகாந்திரங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




