பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தெலுங்கில் இணைந்து நடித்த போது காதலில் விழுந்ததாக கிசுகிசு பரவியது.
'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களிலும் அவர்களது காதல் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு அன்யோன்யமாக நடித்திருந்தனர். அதைப் பார்த்ததுமே அவர்களுக்குள் காதல் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் மாலத்தீவு டூர் கூட ரகசியமாக சென்று வந்தார்கள்.
அடிக்கடி அவர்களது காதல் பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம், பின்னர் திருமணம் என வெளியிட்டு வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தமிழில் 'வாரிசு', ஹிந்தியில் வசூலைக் குவித்த 'அனிமல்' ஆகிய படங்களில் நடித்தார். பிஸியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு திருமண செய்தி வர ஏதும் காரணமா அல்லது உண்மையிலேயே நடக்க உள்ளதா என்பது குறித்து விஜய், ராஷ்மிகா இருவரில் யாராவது ஒருவர் சொன்னால்தான் தெரிய வரும்.