'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் ஒன்றை அளித்திருந்தார் நடிகை கவுதமி. அதில், திருவள்ளூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். கவுதமியின் அந்த புகார் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அழகப்பன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் அந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளார்கள்.