ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் ஒன்றை அளித்திருந்தார் நடிகை கவுதமி. அதில், திருவள்ளூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். கவுதமியின் அந்த புகார் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அழகப்பன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் அந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளார்கள்.