சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நில மோசடி குறித்த புகார் ஒன்றை அளித்திருந்தார் நடிகை கவுதமி. அதில், திருவள்ளூர் , ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். கவுதமியின் அந்த புகார் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அழகப்பன் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அழகப்பன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் அந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளார்கள்.