‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விக்ரம், பசுபதி மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரஞ்சித். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ரஞ்சித். அந்த சந்திப்பின்போது அம்பேத்கர் தன்னுடைய மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை அவர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். அதோடு, எண்ணமெல்லாம் வண்ணமம்மா என்ற ஒரு கேப்சனையும் கொடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக தெரிந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறார். அதற்கான சந்திப்பே இது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.