இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

விக்ரம், பசுபதி மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரஞ்சித். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ரஞ்சித். அந்த சந்திப்பின்போது அம்பேத்கர் தன்னுடைய மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை அவர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். அதோடு, எண்ணமெல்லாம் வண்ணமம்மா என்ற ஒரு கேப்சனையும் கொடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக தெரிந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறார். அதற்கான சந்திப்பே இது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.