இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஒரு மாதமாக அமைந்துவிட்டது. மாதத்தின் துவக்கத்தில் சென்னையில் பெரு மழை ஏற்பட்டு வெள்ளம் வந்தது. அதனால் அப்போது வெளியான படங்களுக்கு வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தியேட்டர்களை மூடும் சூழல் உருவானது. அதன் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அதிகமாக வரவில்லை.
இந்நிலையில் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்த படங்களும் குறிப்பிடும்படி வசூலைத் தரவில்லை. கடந்த வாரம் வெளியான படங்களில் 'பைட் கிளப்' படம் மட்டும் 5 கோடியே 75 லட்சம் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஞாயிறன்று தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதிகளில் தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் இன்னும் படங்களைப் பார்க்கும் மனநிலைக்கு வராத நிலையில், தென் மாவட்டங்களிலும் வெள்ளத் தாக்கம் இருப்பதால் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கும் அதே சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சலார்' உள்ளிட்ட படங்களைக் கூட வாங்கி வெளியிட யோசிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த டிசம்பர் மாதம் திரையுலகிற்கு சொல்லிக் கொள்ளும்படி அமையாது என்று திரையுலகினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.