அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா(70) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு உள்ளது. அந்தவகையில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெல்லை சிவா. இவரது இயர் பெயர் சிவநாதன் சண்முகவேல் ராமமூர்த்தி. 1952ம் ஆண்டு ஜன., 16ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பணகுடியில் சிறுகிராமத்தில் பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் நாடகங்களிலும், டிவிக்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
![]() |
சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்த நெல்லை சிவா இன்று(மே 11) மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிசடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரிலேயே நடக்கிறது. நெல்லை சிவா திருமணமே செய்யாதவர் ஆவார்.
நடிகர்கள் விவேக், பாண்டு என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.