20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம் சிறந்த படமாக பாராட்டப்பட்டதுடன் அதில் நடித்த கதிர், ஆனந்தி, யோகிபாபு மட்டுமல்லாமல், மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் பெயரை பெற்று தந்தது. அந்த வகையில் அந்த படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நெல்லை தங்கராஜ். கூத்து கலைஞரான இவர் இன்று வயது மூப்பு காரணமாக நெல்லையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “ஆங்காரமாய் ஆடியது போதும்.. இளைப்பாருங்கள் அப்பா.. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடு இருக்கும்.. பரியேறும் பெருமாள்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்