சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
இயக்குனர் மாரி செல்வராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படம் சிறந்த படமாக பாராட்டப்பட்டதுடன் அதில் நடித்த கதிர், ஆனந்தி, யோகிபாபு மட்டுமல்லாமல், மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் பெயரை பெற்று தந்தது. அந்த வகையில் அந்த படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நெல்லை தங்கராஜ். கூத்து கலைஞரான இவர் இன்று வயது மூப்பு காரணமாக நெல்லையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “ஆங்காரமாய் ஆடியது போதும்.. இளைப்பாருங்கள் அப்பா.. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடு இருக்கும்.. பரியேறும் பெருமாள்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்