'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 170 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அப்படக் குழு அங்கிருந்து இடம்பெயர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பனங்குடியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்கள். இந்த ஊரில் மூன்று நாட்கள் ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ரஜினிகாந்த் நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு காரில் சென்றார். அங்கே ரசிகர்கள் படை எடுத்துள்ளார்கள். அப்போது காவல்துறை பாதுகாப்பாக ரஜினியை படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு ரஜினி காரில் சென்ற போது காருக்குள் இருந்தபடியே ரசிகர்களுடன் கைக்குலுக்கிய வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170வது படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.