அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? |
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஒரு சில படங்கள் ஹிட் அடிக்க பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்த வகையில் கடந்த வருடம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் ஐந்து படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு இந்த வருடம் இதுவரையிலும் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தை தொடர்ந்து வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஹிந்தியில் மட்டும் தேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அங்கே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவருக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி துபாயில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார் ஆனால் பூஜா ஹெக்டேவின் சோசியல் மீடியா குழுவினர் இந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை.. யாரோ ஏதோ காரணத்திற்காக இப்படி தவறான தகவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்த செய்தியை மறுத்துள்ளனர்.