எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்த விழா வருகிற 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 50 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில், நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்கராஜ், இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.