எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா |

இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்த விழா வருகிற 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகிறது. ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 50 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில், நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்கராஜ், இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ள நிவாரண பணிகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை.




