என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நாளை டிசம்பர் 15ம் தேதி “அகோரி, ஆலம்பனா, பைட் கிளப், கண்ணகி, பாட்டி சொல்லை தட்டாதே, சபாநாயகன், ஸ்ரீ சபரி ஐயப்பன், தீதும் சூதும்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. கணவன், மனைவியான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரது படங்களும் நாளைய வெளியீட்டில் போட்டியிட இருந்தன.
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த 'சபாநாயகன்', கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்த 'கண்ணகி' ஆகிய படங்கள் வெளியாக இருந்த நிலையில் 'சபாநாயகன்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 22ம் தேதி வெளியாகும் என அசோக் செல்வன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை வெளியாக உள்ள படங்களின் பட்டியலில் 'விவேசினி' என்ற படம் சேர்ந்துள்ளது. அதனால் நாளை வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதே 8ல் தான் உள்ளது.