பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

நாளை டிசம்பர் 15ம் தேதி “அகோரி, ஆலம்பனா, பைட் கிளப், கண்ணகி, பாட்டி சொல்லை தட்டாதே, சபாநாயகன், ஸ்ரீ சபரி ஐயப்பன், தீதும் சூதும்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. கணவன், மனைவியான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரது படங்களும் நாளைய வெளியீட்டில் போட்டியிட இருந்தன.
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த 'சபாநாயகன்', கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்த 'கண்ணகி' ஆகிய படங்கள் வெளியாக இருந்த நிலையில் 'சபாநாயகன்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 22ம் தேதி வெளியாகும் என அசோக் செல்வன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை வெளியாக உள்ள படங்களின் பட்டியலில் 'விவேசினி' என்ற படம் சேர்ந்துள்ளது. அதனால் நாளை வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதே 8ல் தான் உள்ளது.




