புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தொடர் தோல்விகளுக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் 'தண்டல்'. இதனை 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடித்த 'லவ் ஸ்டோரி' படம் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் பின்னணியில் உருவாகும் லவ் அண்ட் ஆக்ஷன் மூவி. இதற்காக நாக சைதன்யா அந்த பகுதி மீனவர்களுடன் சில காலம் தங்கிருந்து அவர்களின் மேனரிசம், பேச்சு வழக்கு இவற்றை கற்றார். தற்போது அதே போன்று சாய் பல்லவிக்கு தனியாக ஸ்ரீகாகுளம் மீனவ பெண்களின் பேச்சு வழக்கு, மேனிரசம் குறித்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இரண்டு வார பயிற்சிக்கு பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்று வருகிறார்” என்றார்.