இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தொடர் தோல்விகளுக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் 'தண்டல்'. இதனை 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடித்த 'லவ் ஸ்டோரி' படம் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் பின்னணியில் உருவாகும் லவ் அண்ட் ஆக்ஷன் மூவி. இதற்காக நாக சைதன்யா அந்த பகுதி மீனவர்களுடன் சில காலம் தங்கிருந்து அவர்களின் மேனரிசம், பேச்சு வழக்கு இவற்றை கற்றார். தற்போது அதே போன்று சாய் பல்லவிக்கு தனியாக ஸ்ரீகாகுளம் மீனவ பெண்களின் பேச்சு வழக்கு, மேனிரசம் குறித்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இரண்டு வார பயிற்சிக்கு பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்று வருகிறார்” என்றார்.