விஜய்க்கு நான் யார்? : ரகசியம் உடைத்த வைபவ் | விஜய் தேவரகொண்டாவுக்காக டப்பிங் பேசிய தம்பி | லூசிபர் 2 ரிலீஸ் எப்போது? ; மோகன்லால் தகவல் | எம்ஜிஆர் - சிவாஜிக்கே செட்டாகாத போது எனக்கு மட்டும் எப்படி? ராமராஜன் கேள்வி | 'இந்தியன் 2' இசை விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்? | தெலுங்கு, தமிழில் அனிருத்தின் அடுத்தடுத்த அதிரடி | அதிகாலை காட்சிகளை ரத்து செய்யும் தெலுங்கானா தியேட்டர்கள் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழு, இளையராஜாவை சந்திக்காத காரணம் இதுதானா? | சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா: நாளை தொடங்குகிறது | 15 லட்சம் பணமும் போச்சு, கேன்ஸ் பட விழா வாய்ப்பும் போச்சு: கிரண் வேதனை |
தொடர் தோல்விகளுக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் 'தண்டல்'. இதனை 'கார்த்திகேயா' படங்களை இயக்கிய சந்தூ மொண்டேட்டி இயக்குகிறார். நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடித்த 'லவ் ஸ்டோரி' படம் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வசிக்கும் மீனவ குடும்பங்களின் பின்னணியில் உருவாகும் லவ் அண்ட் ஆக்ஷன் மூவி. இதற்காக நாக சைதன்யா அந்த பகுதி மீனவர்களுடன் சில காலம் தங்கிருந்து அவர்களின் மேனரிசம், பேச்சு வழக்கு இவற்றை கற்றார். தற்போது அதே போன்று சாய் பல்லவிக்கு தனியாக ஸ்ரீகாகுளம் மீனவ பெண்களின் பேச்சு வழக்கு, மேனிரசம் குறித்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இரண்டு வார பயிற்சிக்கு பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதுபற்றி இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும்போது, “படத்தில் நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதனால் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொண்டார். சிறப்பு பயிற்சியாளரிடம் ஸ்ரீகாகுளம் வட்டார வழக்கில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது. அர்ப்பணிப்போடு அதை அவர் கற்று வருகிறார்” என்றார்.