'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில் ‛துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இமயமலையில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். ஆற்றில் நிர்வாண நிலையில் குளிப்பது போன்றும், சமைப்பது போன்றும் எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இமயமலை தெய்வீக தன்மை மிக்கது. ஒவ்வொரு வருடமும் 7 முதல் 10 நாட்கள் வரை அங்கு தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாண படங்களை வெளியிடுவது குழந்தைகள் மனதில் தேவையில்லாமல் மன குழப்பத்தை ஏற்படுத்தும். அதோடு காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927ன் கீழ் குற்றமாகும். பாலித்தீன் பைகளில் இமயமலையில் அவர் வீசி எரிந்திருப்பது சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அம்சம். இமயமலையின் எந்த பகுதிக்கு அவர் சென்றார். அதற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.