தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர் வித்யூத் ஜம்வால். தமிழில் ‛துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இமயமலையில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். ஆற்றில் நிர்வாண நிலையில் குளிப்பது போன்றும், சமைப்பது போன்றும் எடுக்கப்பட்ட படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இமயமலை தெய்வீக தன்மை மிக்கது. ஒவ்வொரு வருடமும் 7 முதல் 10 நாட்கள் வரை அங்கு தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாண படங்களை வெளியிடுவது குழந்தைகள் மனதில் தேவையில்லாமல் மன குழப்பத்தை ஏற்படுத்தும். அதோடு காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927ன் கீழ் குற்றமாகும். பாலித்தீன் பைகளில் இமயமலையில் அவர் வீசி எரிந்திருப்பது சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அம்சம். இமயமலையின் எந்த பகுதிக்கு அவர் சென்றார். அதற்கு முறையான அனுமதி பெற்றாரா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.