பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் | 'கருப்பு' வெற்றி: ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் நன்றி சொன்ன சூர்யா | ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் |

71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளை வென்றது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் சிறந்த நடிகராகவும், ராணி முகர்ஜி சிறந்த நடிகையாகவும், எம்எஸ் பாஸ்கர், விஜயராகவன் சிறந்த துணை நடிகராகவும் தேர்வாகினர். இதேப்போல் பல மொழிகளிலும் உள்ள படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்த படத்தை விட அந்த படத்திற்கு கொடுத்திருக்கலாம், அந்த நடிகர், நடிகைக்கு வழங்கியிருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ‛உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்வசி கூறுகையில், ‛‛எனக்கு விருது அறிவித்த தேர்வு குழுவிற்கு நன்றி. எதன் அடிப்படையில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். இதற்கான அளவுகோல் என்ன. சிறந்த நடிகரான விஜய ராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணிநேரம் மேக்-அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார். தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.