ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். ஏடாக்கூடாமாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். 2021ல் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் இவர் மீதும், இவரது நண்பர் சாம் அபிஷேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் 2021, ஆகஸ்டில் இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
இந்நிலையில் டில்லி நகர வீதிகளில் இவர் சுற்றி வந்துள்ளார். அவரை மீட்டு தரக்கோரி மீரா மிதுன் தாயார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் அங்குள்ள காப்பகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை ஏற்ற நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து ஆக., 11ல் ஆஜர்படுத்தும்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




