பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எஸ்ஜே சூர்யாவை, “இந்நாளின் திரை உலக நடிகவேள்', வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்,” எனப் பாராட்டியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு நேற்றே பதிலளித்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி..உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த போது ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவையும், தனியாக எடுத்த போட்டோவையும் இன்று பகிர்ந்து, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஒரு குறிஞ்சி மலர் - தலைவரிடமிருந்து ஸ்டேன்மென்ட்”, மற்றும் தலைவர் ரஜினிகாந்த் சாருடன் ஒரு குறிஞ்சி தருணம்… உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம், மிக்க நன்றி சார். ,” என இன்று மீண்டும் நன்றியைத் தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.