சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எஸ்ஜே சூர்யாவை, “இந்நாளின் திரை உலக நடிகவேள்', வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்,” எனப் பாராட்டியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு நேற்றே பதிலளித்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி..உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த போது ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவையும், தனியாக எடுத்த போட்டோவையும் இன்று பகிர்ந்து, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஒரு குறிஞ்சி மலர் - தலைவரிடமிருந்து ஸ்டேன்மென்ட்”, மற்றும் தலைவர் ரஜினிகாந்த் சாருடன் ஒரு குறிஞ்சி தருணம்… உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம், மிக்க நன்றி சார். ,” என இன்று மீண்டும் நன்றியைத் தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.