மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கோபால்சாமி, 45. இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்துகிறார். இவர் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில், மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின், 'ஆல் இந்தியா தலைவர்' எனக் கூறினார். அந்த அமைப்பின் தமிழக கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறி 3.50 கோடி ரூபாய் கேட்டார்.
நான் முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்ற அவர், பதவியை பெற்றுத் தரவில்லை. கேட்டபோது நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அவருக்கு பதவியை கொடுத்து விட்டதாக கூறினார். என் பணத்தை திரும்ப கேட்டபோது, 9 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதி, 41 லட்சத்தை, ஒரு மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். பணத்தை பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நடிகை நமீதா, அவரது கணவர் சவுத்ரி, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம், சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். முத்துராமன், துஷ்யந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்த பணத்தில் சொத்து வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மேலும் விசாரிக்க, நமீதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ., நிர்வாகி மஞ்சுநாத் ஆகியோருக்கு சேலம் மாநகர போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.