300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகும் போது அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே சிறப்புக் காட்சிகளைத் திரையிட வேண்டும். அதற்காக அரசுக்கு விண்ணப்பித்து அனுமதியைப் பெற வேண்டும். அப்படித்தான் கடந்த மாதம் வெளியான 'லியோ', கடந்த வாரம் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்' ஆகிய படங்கள் அனுமதி பெற்று சிறப்புக் காட்சிகளை நடத்தினார்கள்.
இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான திருப்பூர் சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 11.50 மணிக்கும் கடந்த இரண்டு நாட்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அது குறித்த 'ஸ்கிரீன் ஷாட்'கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இதையடுத்து உரிய அனுமதியின்றி 6 காட்சிகளைத் திரையிட்ட அத்தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.