கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
விஜயகாந்த்த நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம்தான் நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தனது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
நமீதா நேற்று தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்தார். பின்பு மாலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “என் பிறந்தநாளையொட்டி கோயிலில் அன்னதானம், பூஜை செய்தேன். எனக்கு மகிழ்ச்சி. கேப்டன் (விஜயகாந்த்) மறைந்த சமயத்தில் என்னால் இங்கு வர முடியவில்லை. இன்று என் பிறந்தநாளின்போது கேப்டனின் ஆசீர்வாதம் வேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் கடவுளாக கருதும் அவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது என்னுடைய பாக்கியம். தமிழ்நாட்டில் நமீதாவுக்கு உயிர் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தது மகிழ்ச்சி.” என்றார்.