என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் சிவகுமார் பாணியில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை விஜய் கவுரவிக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு 1500 மாணவர்களை அழைத்து கவுரவித்து, அவர்களுக்கு விருந்தளித்தார். அதேபோன்று இந்த ஆண்டும் செய்ய இருக்கிறார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ்நாடு, புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.