ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் தற்போது நடித்து வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு துபாய் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறைவில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, ஸ்ரீதேவி வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள மும்பை லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு (சவுக்) 'ஸ்ரீதேவி கபூர் சவுக்' என பெயரிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.