சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' | பிளாஷ்பேக்: தமிழில் டப் செய்யப்பட்ட கார்த்திக் படம் | பிளாஷ்பேக்: காத்தவராயனாக நடிக்க மறுத்த எம்ஜிஆர், நடித்து வெற்றி பெற்ற சிவாஜி | 'காந்தாரா சாப்டர் 1' நான்கு வார ஓடிடி வெளியீடு, ஏன்? | அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? |

பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கணவர் வீரேந்திராவுடன் சென்றார். முகூர்த்த தினம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நமீதா வந்ததை அறிந்த பலர், அவருடன் போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் முட்டி மோதினர். அவரும் பலருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக கிளம்பி சென்று விட்டார். முன்னதாக கோவில் தல வரலாற்றை, கோவில் புலவர் அறிவிடம், அவர் கேட்டறிந்தார்.