'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்கள் வரும் போதும், பெரிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்பாகவே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிடும். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட படத்தை வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு இடைவெளி இப்போது வந்துள்ளது.
அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், அக்டோபர் 20ம் தேதி 'மார்கழித் திங்கள்' படமும், தெலுங்கு டப்பிங் படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் இங்கு வெளியாக உள்ளது. அந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
எப்படியாவது படத்தை வெளியிட்டால் போதும் என இன்று சில தமிழ்ப் படங்களை வெளியிட்டுள்ளார்கள். “அக்கு, குண்டான்சட்டி, மயிலாஞ்சி, புது வேதம்” ஆகிய படங்கள் இன்று வெளியாகி உள்ளன. கடந்த வாரமும் அதற்கு முன்பும் வெளியான படங்களின் ஓட்டம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்கவில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லியோ' படமாகவே இருந்தாலும் அதிக பட்சம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. மற்ற படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. இரண்டாவது வார போஸ்டர் என்பதெல்லாம் வெற்றுப் பெருமைக்காக வெளியிடப்படுபவைதான் என்கிறார்கள்.