ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து ஆரம்பமாகியிருப்பது இதுவே முதல் முறையாகக் கூட இருக்கலாம்.
ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். அங்குள்ள பழமையான பங்களா ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சியின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமாகிறது. அதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளார்கள். அஜர்பைஜான் எங்குள்ளது என்பது சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஈரான் நாட்டிற்கு வடக்கில் உள்ள நாடுதான் அஜர் பைஜான். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த ஒரு நாடுதான் இது. காஸ்பியன் கடல் ஒரு பக்கம் உள்ளது.
விரைவில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள அவரது 233வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படங்கள் அனைத்துமே அடுத்தாண்டு நிச்சயம் வெளியாகும். அதனால், அடுத்த ஆண்டில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் ஒரு ஆண்டாக அமையப் போகிறது.