ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. தமிழில் ‛யார் இவன்' என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி பேசி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி என்னை கேட்டனர். நான் மறுத்ததால் என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பினார். இதனால் சில பட வாய்ப்புகளை இழந்தேன். இன்னொரு படத்திலும் இதேப்போன்று என்னிடம் அணுகினர். அவர்களின் நோக்கத்தை புரிந்து நான் சுதாரித்துக் கொண்டு மறுத்துவிட்டேன்,'' என்றார்.