இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் | பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் வரிசையில் 'மிராய்' நாயகன் தேஜா சஜ்ஜா | டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா |
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் தமிழ் நடிகைகளான கிரண் மற்றும் ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், சென்றவாரத்தில் கிரண் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஷகீலா மற்ற ஹவுஸ்மேட்டுகளுடன் செட்டாகி நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஷகீலா சிகெரட் பிடித்த வீடியோ காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சக ஹவுஸ்மேட்டான கிரண் எலிமினேட் ஆகிவிட்ட சோகத்தில் தான் அவர் சிகரெட் பிடித்தாராம். இதனையடுத்து ஷகீலாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். யு-டியூப் சேனலில் ஷகீலா விஷ்ணுகாந்த், டிக்-டாக் சூர்யா என பலரை அழைத்து பேட்டி எடுக்கும் போது பல அட்வைஸ்களை கொடுத்தார். ஆனால், அவரே இப்போது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக சிகரெட் அடிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.