22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் தமிழ் நடிகைகளான கிரண் மற்றும் ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், சென்றவாரத்தில் கிரண் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஷகீலா மற்ற ஹவுஸ்மேட்டுகளுடன் செட்டாகி நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஷகீலா சிகெரட் பிடித்த வீடியோ காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சக ஹவுஸ்மேட்டான கிரண் எலிமினேட் ஆகிவிட்ட சோகத்தில் தான் அவர் சிகரெட் பிடித்தாராம். இதனையடுத்து ஷகீலாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். யு-டியூப் சேனலில் ஷகீலா விஷ்ணுகாந்த், டிக்-டாக் சூர்யா என பலரை அழைத்து பேட்டி எடுக்கும் போது பல அட்வைஸ்களை கொடுத்தார். ஆனால், அவரே இப்போது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக சிகரெட் அடிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.