Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏஆர் ரஹ்மானை எதுவும் சொல்லாதீங்க, நாங்க பொறுப்பேற்கிறோம், பணம் திரும்பி வழங்கப்படும் : மன்னிப்பு கேட்ட ஏசிடிசி ஹேமந்த்

13 செப், 2023 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Dont-say-anything-to-AR-Rahman,-we-will-take-responsibility,-money-will-be-refunded:-ACTC-apologizes-Hemant

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த ஞாயிறு(செப்., 10) அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு ஒரு வலியை தந்த இசை நிகழ்ச்சியாக மாறி விட்டது.

குறிப்பாக அளவுக்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது, வாகனங்களுக்கு சரியான பார்க்கிங் வசதி செய்யாதது, பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு நான்கைந்து வாயில்கள் ஏற்பாடு செய்யாதது, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நடந்த அஜாக்கிரதை என அடுக்கி கொண்டே போகலாம்.



நானே பலிகடா
இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் குளறுபடி தான் முழு காரணம் என்றாலும் மக்கள் நம்பி வந்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை மனிதருக்காகத்தான். ஆனால் அவரே ஆரம்பத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என ரீ-டுவீட் போட்டார். பின்னர் சற்றுநேரத்திற்கு பிறகு, ‛‛என்னை சிலர் ஆடு என்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலியாடு ஆகிறேன். நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியை அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்'' என பதிவிட்டார்.

ரஹ்மானுக்கு திரையுலகினர் ஆதரவு
இசை நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் ரஹ்மானை குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அவர் மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் இந்த விவகாரத்தில் ரஹ்மானை குற்றம் சொல்லாதீர்கள், அவர் மீது எந்த தவறும் இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கினர்.



ரஹ்மான் மகள் கதீஜாவோ, ‛‛என் தந்தை மோசடி செய்தது போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன் கேரள மழை வெள்ளம், கோவிட் பாதிப்பு உள்ளிட்ட காலங்களில் என் தந்தை இசை நிகழ்ச்சி நடத்தி, அந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அவரை பற்றி தவறாக பேசும் முன் இதையெல்லாம் கொஞ்சம் நினைத்து பாருங்கள்'' என பதிவிட்டார்.

நாங்க பொறுப்பேற்கிறோம் - ஏசிடிசி
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த ஏசிடிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஆதரித்த ரசிகர்களுக்கும், இசை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்த ரஹ்மானுக்கும் நன்றி. அதேசமயம் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனது போன்ற சில தவிர்க்க முடியாத அசவுகரியங்களும் நடந்துள்ளன. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இதற்கான முழு பொறுப்பையும் ஏசிடிசியான நாங்களே பொறுப்பேற்கிறோம்.



ரஹ்மான் மிகப்பெரிய லெஜெண்ட். நிகழ்ச்சியை அவர் சிறப்பாக நடத்தி கொடுத்தார். இதை உள்ளே அமர்ந்து பார்த்த ரசிகர்களும் ரசித்துள்ளனர். சமூகவலைதளங்களில் ரஹ்மானை தாக்கி நிறைய பேர் கருத்து பதிவிடுகின்றனர். ஆனால் இதற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை மையப்படுத்தி எந்த ஒரு தாக்குதலும் சமூகவலைதளங்களில் வைக்காதீங்க என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் நிகழ்ச்சியை முறையாக அனுமதி பெற்று, சரியாக நடத்தினோம். ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக மீண்டும் மீண்டும் நான் எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறேன். டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்களுக்கு நிச்சயம் நாங்கள் பணத்தை திருப்பி தருவோம். முறைப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பணம் திருப்பி அளிக்கப்படும்.

இவ்வாறு ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி : டிக்கெட் பணத்தை திருப்பி தரும் ஏஆர் ரஹ்மான்மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி : ... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் விஜய் அமெரிக்காவிலிருந்து சென்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

S A Sarma - Hyderabad,இந்தியா
15 செப், 2023 - 01:00 Report Abuse
S A Sarma A.R.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த அடிதடி கூட்டம், அதைப் பற்றி ஒன்றும் பேசாத ஊடகங்கள் நினைத்தால் , அடிமையாக எப்படியெல்லாம் வாழலாம் என்று புரிகிறது. இந்தப் பிழைப்பு ஒரு பிழைப்பா என்று நினைக்கத் தோன்றுகிறது. பணம் திருப்பித் தருகிறேன்,மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்ன பொழுது , செந்தில் பாலாஜி நான் வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விட்டேன் என்று கூறியது நினைவிற்கு வந்தது. பண மோசடி நடந்ததா என்று கேட்டால், இசைக் கலைஞரின் மகள் ,திட்டாத குறையாக திட்டி தீர்த்து விட்டாள். மக்கள் எங்காவது பண மோசடி என்று கேட்டால் என்ன செய்வது என்பதை திசை திருப்ப, இரண்டு போலீஸ் அதிகாரிகள் மாற்றப் பட்டுள்ளது திராவிட மாடல் போல் தெரிகிறது. சனாதன தர்மத்தை பற்றி வசை பாடியவரை கண்டிக்காமல் இருந்த, செல் ஃபோன் சிவகுமார் குடும்பத்தில் இருந்து கார்த்திக் நாம் அனைவரும் இசைக் கலைஞர் அவர்களை அன்புடன் நேசிக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் போதனை நல்ல வேளை பண மோசடி நடந்த இடத்தில் டெங்கு மலேரியா கொசுக் கட்சியின் வழக்கறிஞர் ஆர் எஸ் பாரதி வரவில்லை. இந்த குளறுபடி, பா ஜ க மேடையில் நடந்து இருந்தால், உடனே என் மண், என் மக்கள் யாத்திரை நிறுத்தப் பட்டு இருக்கும். அண்ணாமலை அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பார். நல்ல வேளை ரஹ்மான் அவர்கள் அண்ணாமலை தான் இந்த இசை நிகழ்ச்சி நடத்தச் சொன்னார் என்று கூறவில்லை. எல்லா பெருமையும் இறைவனுக்கே
Rate this:
Anand - chennai,இந்தியா
14 செப், 2023 - 10:26 Report Abuse
Anand கூட்டுக்களவாணிகள்.....
Rate this:
14 செப், 2023 - 10:03 Report Abuse
அப்புசாமி முதல்ல ஒரு 50 கோடியை நீதிமன்றத்தில்.கட்டுங்க. பணம் திருப்பி குடுத்தது போக மீதி இருந்தால் உங்க கிட்டே குடுக்கப்படும்.
Rate this:
Nandakumar - chennai,இந்தியா
14 செப், 2023 - 08:46 Report Abuse
Nandakumar முழு பொறுப்பும் ரஹ்மான்னுடையதுதான். எல்லோரும் அவருக்கு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். நான் கேட்கிறேன், ரஹ்மான் தன்னுடைய நிகழ்ச்சிக்கு எத்தனை டிக்கெட் விற்பனையாகியது என்று கேட்டிருக்க மாட்டாரா? நிகழ்ச்சிக்கு வருமுன் அரங்கம் எப்படி இருக்கு என்று பார்த்திருக்க மாட்டாரா? ஒருவேளை மக்கள் குறைந்த அளவில் இருந்தால் போன் பண்ணி கேட்டு நிகழ்ச்சியை தள்ளிவைத்திருக்க மாட்டாரா? நாம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்ய ஈவென்ட் மேனேஜரிடம் ஒப்படைத்தால் அப்படியே விட்டுவிடுவோமா? நாம் ஒரு முறை பொய் பார்க்கமாட்டுமா? என்ன கதை இது? யாரை ஏமாற்றுகிறார்கள்? ரஹ்மான் தான் முழு பொறுப்பு.
Rate this:
14 செப், 2023 - 08:18 Report Abuse
r  g                 chennai they convert black money to white money
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in