போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு டைம் டிராவல் படம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தில் ஹாலிவுட் ரேன்ஞ்சிற்கு அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பார்வையிடவும், விஜய்யை 3டி தொழில் நுட்பத்தில் மோசன் கேப்ச்சர் முறையில் படங்கள் எடுக்கவும் படக்குழுவினர் அமெரிக்கா சென்றார்கள். இதனை அங்குள்ள ஸ்டூடியோவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த பணிகளை முடித்து விட்டு ஏற்கெனவே வெங்கட்பிரவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் திரும்பிவிட்ட நிலையில் பணிகளுக்கு பிறகும் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்த விஜய் நேற்று சென்னை திரும்பினார். இங்கு தற்போது அவர் 'லியோ' படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபடுவார் என்றும், நவம்பர் மாதத்தில் இருந்து வெங்கட்பிரபுவின் படத்தில் பணியாற்றுவார் என்றும் தெரிகிறது.