இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு டைம் டிராவல் படம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தில் ஹாலிவுட் ரேன்ஞ்சிற்கு அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பார்வையிடவும், விஜய்யை 3டி தொழில் நுட்பத்தில் மோசன் கேப்ச்சர் முறையில் படங்கள் எடுக்கவும் படக்குழுவினர் அமெரிக்கா சென்றார்கள். இதனை அங்குள்ள ஸ்டூடியோவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த பணிகளை முடித்து விட்டு ஏற்கெனவே வெங்கட்பிரவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் திரும்பிவிட்ட நிலையில் பணிகளுக்கு பிறகும் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்த விஜய் நேற்று சென்னை திரும்பினார். இங்கு தற்போது அவர் 'லியோ' படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபடுவார் என்றும், நவம்பர் மாதத்தில் இருந்து வெங்கட்பிரபுவின் படத்தில் பணியாற்றுவார் என்றும் தெரிகிறது.