ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து அசத்தி வந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாசர், சரத்குமார், ரோபோ சங்கர், ராஜேஷ், இயக்குனர் வசந்த், எஸ்வி சேகர், முனீஸ்காந்த், வையாபுரி, ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சத்யபிரியா, எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மற்றும் அந்த தொடரில் நடித்துள்ள சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் புகழ், ரவி மரியா, சென்ட்ராயன், தீபா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மாரிமுத்துவின் இறுதிச்சடங்கு நாளை(செப்., 9) தேனி, வருஷநாட்டில் உள்ள சொந்த ஊரில் நடக்கிறது.