வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் கங்கனா நடித்துள்ளார். இவர்கள் தவிர மகிமா நம்பியார், வடிவேலு நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா குறித்து ஏற்கெனவே சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா, சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள். என பதிவிட்டிருக்கிறார்.