நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடிக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இது அக்கா, தம்பி உறவு சம்பந்தப்பட்ட படம் என்கிறார்கள். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.