கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

2021ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்கள் பெயர்களை நேற்று அறிவித்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த படம் கடைசி விவசாயி. இதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு விருது அறிவித்தனர் மற்றும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' எனும் பாடலுக்கான சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தனர்.
தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை தேர்வு குழுவினர் நிராகரித்ததால் நேற்று நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்காக விருது கிடைக்காததால் இதயம் உடைந்த இமோஜியை பதிவிட்டு ஜெய்பீம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், நானி நடித்த ஷாம் ஷிங்கா ராய் படமும் தேர்வு குழுவினர்கள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.