ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
2021ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்கள் பெயர்களை நேற்று அறிவித்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த படம் கடைசி விவசாயி. இதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு விருது அறிவித்தனர் மற்றும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' எனும் பாடலுக்கான சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தனர்.
தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை தேர்வு குழுவினர் நிராகரித்ததால் நேற்று நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்காக விருது கிடைக்காததால் இதயம் உடைந்த இமோஜியை பதிவிட்டு ஜெய்பீம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், நானி நடித்த ஷாம் ஷிங்கா ராய் படமும் தேர்வு குழுவினர்கள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.