மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

2021ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்கள் பெயர்களை நேற்று அறிவித்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த படம் கடைசி விவசாயி. இதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு விருது அறிவித்தனர் மற்றும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' எனும் பாடலுக்கான சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தனர்.
தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை தேர்வு குழுவினர் நிராகரித்ததால் நேற்று நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்காக விருது கிடைக்காததால் இதயம் உடைந்த இமோஜியை பதிவிட்டு ஜெய்பீம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், நானி நடித்த ஷாம் ஷிங்கா ராய் படமும் தேர்வு குழுவினர்கள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.