பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியவர் ஞானவேல். இவர் அடுத்தபடியாக மறைந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி இடையே நடந்த சட்டப் போராட்டம் மற்றும் ஜீவ ஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு குறித்த கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கதையை தமிழில் இயக்காமல் ஹிந்தியில் தோசா கிங் என்ற பெயரில் இயக்குகிறார். ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி கேரக்டர்களில் பிரபல பாலிவுட் நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இது குறித்த தகவலை ஜுங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.