25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று இசையமைப்பாளர் இளையராஜா பதவி ஏற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்தவாரம் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜூலை 25) ராஜ்யசபா எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்டார் இளையராஜா. பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்று, கடவுள் பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.