நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தெலுங்கு, தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் -15 ஆகிய படங்களை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களில் நடிப்பதற்காக அறிமுக நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. அதை பார்த்துவிட்டு புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ஆர்.சி-15, எஸ்விசி- 50 படங்களுக்கு அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இது குறித்து வெளியாகி உள்ள அனைத்து செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தியே. அதனால் யாரும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.




