பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
சமூக வலைதளத்தில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு அவ்வபோது சர்ச்சைகளிலும் சிகிச்சை கொண்டு வருகிறார் நடிகை கஸ்தூரி. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பற்றி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், அஜித்னா யாரு? கேக்க மாட்டாங்களா. பின்னே பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல், யாரும் தூக்கி விடாம, யாரையும் கெடுக்காமல், சொந்த முயற்சியில் மேல வந்தவரு. அவரை எல்லாம் எப்படி தெரியும் என்று பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.
இதற்கு அதிகமான ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்தார்கள். அதில் ஒருவர், அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி பதிலளிக்கையில், ‛ஜாதி பார்க்கும்போதே உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா?' என்று பதில் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி. அவரது இந்த பதிவுக்கு அதிகப்படியான கமெண்ட்களும் லைக்குகளும் கிடைத்து வருகிறது.