காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதன் காரணமாக அமீரும், பாவனியும் பிரேக் அப் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அதுகுறித்து மீடியாக்களிடத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். அதில், எங்களை பற்றி வெளியாகி வரும் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை. யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.