சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது காதலித்தார்கள். இதை பாவனி மறுத்து வந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவரும் காதலை உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நேரத்தில் தன்னுடைய சோசியல் மீடியாவில், நான் சிங்கிள் தான் என்று பாவனி ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார்.
அதன் காரணமாக அமீரும், பாவனியும் பிரேக் அப் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி தீயாகப் பரவியது. இந்நிலையில் அவர்கள் இருவரும் அதுகுறித்து மீடியாக்களிடத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். அதில், எங்களை பற்றி வெளியாகி வரும் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை. யாரோ வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். என்று அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.




