பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஐஸ்வர்யா தற்போது தனியாக 'மசாலா பாப்பார்ன்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஒயிட் பெதர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. 'மீசைய முறுக்கு' படத்தில் அறிமுகமான ஆனந்த் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் பவானி ஸ்ரீ, இர்பான், குமரவேல், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது. என்றார்.
படத்தை வெளியிடும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது: ‛சென்னை 28' படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த படம் ரசிகர்களின் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டுத் தருவோம். நண்பர்களுக்காக நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது. என்கிறார் வெங்கட் பிரபு.