இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட்' நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஐஸ்வர்யா தற்போது தனியாக 'மசாலா பாப்பார்ன்' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஒயிட் பெதர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. 'மீசைய முறுக்கு' படத்தில் அறிமுகமான ஆனந்த் இயக்கி, நடித்துள்ளார். அவருடன் பவானி ஸ்ரீ, இர்பான், குமரவேல், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆனந்த் கூறியதாவது: படம் சென்னையின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இதன் பெரும்பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வாழ்க்கையையும் நட்பையும் கொண்டாடும் வகையில் உணர்வுப்பூர்வமாக வந்துள்ளது. என்றார்.
படத்தை வெளியிடும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது: ‛சென்னை 28' படத்தின் நினைவுகளுக்கு என்னை அழைத்து சென்ற இந்தப் படத்தை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. சிறந்த கனவுகளுடன், இந்த அற்புதமான சினிமாவில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சிக்கும் இந்த இளம் திறமைகளை பார்க்கும் போது எங்களையே மீண்டும் பார்ப்பது போல உள்ளது. இந்த படம் ரசிகர்களின் நண்பர்களைப் பற்றிய கதையாகவோ அல்லது உங்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். விரைவில் நாங்கள் அதை உங்களிடம் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாட்களை மீட்டுத் தருவோம். நண்பர்களுக்காக நண்பர்கள் சேர்ந்து செய்த படம் இது. என்கிறார் வெங்கட் பிரபு.