பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சாதனைக்காக அவ்வப்போது வித்தியாசமாக படம் எடுப்பார்கள். ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், ஒரே ஷாட்டில் எடுக்கும். 24 மணி நேரத்தில் எடுத்த படம் என்று நிறைய சாதனை படங்களை எடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா' என்கிற படம். இதனை ஜி.சிவா என்பவர் இயக்கி, நடித்திருக்கிறார்.
ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். வருகிற 25ம் தேதி படம் தியேட்டரில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர், நடிகர் ஜி.சிவா கூறியதாவது : ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பினேன். 20 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம் பெற வைத்திருக்கிறோம். சண்டைக் காட்சிகளில் என்னை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
இதுபோன்று நிறைய வித்தியாசமான படங்களை இயக்க விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம். விரைவில் சாதகமான பதில் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.