இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்" என்றார்.