பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்" என்றார்.