மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் சித்திக். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்', விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா', பிரசன்னா நடித்த 'சாது மிரண்டால்', விஜய் நடித்த 'காவலன்', கடைசியாக அரவிந்த்சாமி நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கினார்.
69 வயதான சித்திக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிர்காக்கும் கருவிகள் உதவியால் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.