சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்குகிறார் என்று சமீபத்தில் அறிவித்தனர். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்து மற்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த நிலையில் ல நாட்களுக்கு முன் 'உடன் பிறப்பே' பட இயக்குனர் சரவணினின் இல்ல விழாவில் வினோத் கலந்து கொண்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது; " இந்த ஊரின் இயற்கையான சூழல் எனக்கு பிடித்திருக்கிறது. இங்கேயே தங்கி விடலாம் என நினைக்க வைக்கிறது. அடுத்த படம் கமல்ஹாசனை வைத்து இயக்குகிறேன். இது விவசாயம் சார்ந்த படம் இல்லை . கமல்ஹாசன் உடன் இரண்டு, மூன்று கதைகளை பேசினேன். அப்போது அவர் எனக்கு சொன்ன சில கதைகள் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அந்த கதைக்கு நான் இப்போது திரைக்கதை எழுதி இயக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.