சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
நடிகர் தனுஷ் கடந்த வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து நேற்று திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம் செய்தார்.
இதையடுத்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா,சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஸ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள். ஆனால், இது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஏற்கனவே சென்னையில் உள்ள இ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை(ஜூலை 5) புதன்கிழமை பூஜையுடன் துவங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது .