இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம் என்ற பெருமைக்குரிய எம் கே தியாகராஜ பாகவதர், 1934ம் ஆண்டு “பவளக்கொடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 1960ல் வெளிவந்த “சிவகாமி” என்ற திரைப்படத்தோடு தனது கலையுலக வாழ்விலிருந்தும், உலக வாழ்விலிருந்தும் விடை பெற்றார். ஏறத்தாழ இந்த 16 ஆண்டுகால வெள்ளித்திரைப் பயணத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அத்தனையும் அவரது குரலினிமையினால் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
“அம்பிகாபதி”, “அசோக்குமார்”, “சிவகவி”, “ஹரிதாஸ்” போன்ற வரிசைக்கட்டி வந்த அவரது வெற்றித் திரைப்படங்களுக்கு அடித்தளமிட்ட திரைப்படம்தான் “சிந்தாமணி”. 1936ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம்தான் ஓராண்டு வரை ஓடிய முதல் தமிழ் திரைக்காவியம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. “சிந்தாமணி” திரைப்படத்தில் மொத்தம் 25 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
“ராதே உனக்கு கோபம் ஆகாதேடி” என்ற பாகவதரின் தனிப்பாடலுடன், “கிருஷ்ணா கிருஷ்ணா முறையோ கேள் நீ”, “மாயபிரபஞ்சத்தில்” ஆகிய பாடல்களை, சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த படத்தின் நாயகி அஸ்;வத்தாமாவுடன் பாகவதர் இணைந்து பாடியிருந்ததும் அந்நாளில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டிருந்தன. படத்தின் கிராமபோன் இசைத்தட்டுகளும் வெகு விமிரிசையாக பிரபலமாகியிருந்திருந்தாலும், இசைத்தட்டில் இடம் பெற்றிருந்த பாடல்களை தியாகராஜ பாகவதர் பாடவில்லை என்பதே உண்மை.
இசைத்தட்டு பதிவுகளை தயாரித்த நிறுவனத்தோடு அவர் ஒப்பந்தத்தில் இல்லாததாலோ, அல்லது வேறு காரணங்களாலோ தியாகராஜ பாகவதர் பாட இயலாமல் போக, ஏறக்குறைய அவரைப் போலவே குரல்வளம் கொண்ட துறையூர் ராஜகோபால சர்மா என்பவரை பாடவைத்து இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கின்றனர். இயக்குநர் ஒய் வி ராவ் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் எம் கே தியாகராஜ பாகவதருடன் அஸ்வத்தாமா, செருகளத்தூர் சாமா, எல் நாராயண ராவ் ஆகியோர் நடித்திருக்க, பாடல்களை எழுதி, இசை வடிவம் தந்திருந்தார் பாபநாசம் சிவன்.
சரியாக ஒரு வருடம் வரை ஓடிய இத்திரைப்படத்திலிருந்து கிடைத்த கணிசமான லாபத்தை வைத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான “ராயல் டாக்கீஸ்” உரிமையாளர்கள், மதுரையில் ஒரு திரையரங்கையே கட்டி, அதற்கு “சிந்தாமணி திரையரங்கம்” என்று பெயரையே வைக்கும் அளவிற்கு ஒரு உன்னத படைப்பாக உருவானதுதான் இந்த “சிந்தாமணி” திரைப்படம்.