‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சியால் கலக்கியவர் 'மச்சான்ஸ்' நடிகை நமீதா. ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகரிக்கவே, பட வாய்ப்புகள் குறைந்தது. அதையடுத்து வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு கடந்த வருடம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ண ஆதித்யன் மற்றும் கியான் ராஜ் என்கிற இந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது ஒரு வயது நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கேரளாவில் உள்ள அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலுக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்து பிரார்த்தனை செய்துள்ளார் நமீதா. இதுகுறித்து அவர் கூறும் போது, “இந்த குழந்தைகள் இருவரும் பிறந்த பின்னர் தான் எங்களது வாழ்க்கையில் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஹேப்பி பர்த்டே டு மை ட்வின்ஸ்.. இதயத்தில் இருந்தும்.. இதயத்துடிப்பில் இருந்தும்..” என்று கூறியுள்ளார்.