டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. அவரை நீண்டகாலமாக காக்க வைத்த சிவகார்த்திகேயன் தற்போது அக்டோபர் மாதத்தில் இந்த படத்திற்கான கால்ஷீட் ஒதுக்கியதால் இதற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட்பிரபு விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தான் உருவாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளதால் மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




